திருமணம் செய்து கொண்டால் பிரிந்து விடுவோம்! அதீத அன்பு கொண்டிருந்த இரட்டை சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு
இந்தியாவில் திருமணம் செய்தால் பிரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மண்டியாவில் உள்ள ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்- யசோதா தம்பதி. இந்த தம்பதிக்கு தீபிகா (19), திவ்யா (19) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள்.
இதனால் சிறு வயதில் இருந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதீத அன்பு செலுத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் வரன் தேடி வந்தனர்.
ஆனால் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை என்றும், திருமணம் செய்தால் இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விடுவோம் என இருவரும் கருதினர். திருமணமாகி தனித்தனியாக செல்வதை காட்டிலும் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என தீபாகவும், திவ்யாவும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் தனித்தனி அறைகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், திருமணமானால் இருவரும் தனித்தனியாக பிரிந்துவிடுவோம் என கருதிய தீபிகாவும், திவ்யாவும் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.