பிரித்தானியாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு!
பிரித்தானியாவில் இருவருக்கு ஒமைக்ரான் எனப்படும் கொரோனா வைரஸ் மாறுபாடு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
உலகில் பல்வேறு நாடுகளில், தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, விமானங்களைத் தடை செய்து வருகின்றன.
இந்நிலையில், பிரித்தனியாவில் இருவருக்கு 'ஒமைக்ரான்' எனப்படும் கொரோனா வைரஸ் மாறுபாடு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது, ஒமைக்ரான் மாறுபாட்டின் இரண்டு தொற்றுகள் பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக UKHSA எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் தொடர்பில் இருந்துள்ளனர் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது.
இருவரும் தங்கள் வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், மேலும் பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதிகளான Nottingham மற்றும் Chelmsford-ல் கூடுதல் சோதனை முடக்கவிட்டுள்ளோம்.
இது மிக வேகமாக செயல்படக்கூடிய சூழ்நிலை மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
மலாவி, மொசாம்பிக், ஜாம்பியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளையும் சிவப்பு பட்டியலில் சேர்க்கிறோம்.ஞாயிறு காலை 4 மணி முதல் இது அமலுக்கு வரும்.
கடந்த 10 நாட்களில் இந்த நாடுகளிலிருந்து பிரித்தானியா வந்திருந்தால், தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
As a precaution we are rolling out additional targeted testing in the affected areas - Nottingham and Chelmsford - and sequencing all positive cases.
— Sajid Javid (@sajidjavid) November 27, 2021
This is a fast-moving situation and we are taking decisive steps to protect public health.
பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள் உடனடியாக பெற வேண்டும் என இப்போது அதைப் பெறுவதற்கான நேரம் இது என சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.