ஜேர்மன் குற்றவாளிக்கு உதவும் இரண்டு பெண்கள்: விடாமல் தொடரும் அதிகாரிகள்
போர்ச்சுக்கல் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதியரின் குழந்தை மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நபர் புதிதாக இரண்டு பெண்களின் நட்பைப் பெற்றுள்ளார்.
பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, தங்கள் மகளான மேடி என்னும் மேட்லின் மெக்கேன் என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.

குழந்தையைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கிறிஸ்டியன் (Christian Brueckner) என்னும் நபர், வேறொரு மோசமான குற்றத்துக்கான ஜேர்மன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆக, பிரித்தானியா, ஜேர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய மூன்று நாட்டு பொலிசார் மேட்லினைத் தேடிவந்தார்கள்.
குழந்தை மேட்லின் காணாமல்போய் சுமார் 18 ஆண்டுகள் ஆகியும் அவளுக்கு என்ன ஆயிற்று என்பதும் தெரியவில்லை, ஒருவேளை அவள் சந்தேக நபரான கிறிஸ்டியனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றால் அவளது உடலும் கிடைக்கவில்லை.

கிறிஸ்டியன், குழந்தை மேட்லின் குறித்து ஏதாவது கூறுவாரா என பொலிசார் காத்திருந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், ஜேர்மனியின் Sehnde நகரில் வன்புணர்வுக் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்டியன் தனது தண்டனைக்காலம் முடிவடைந்ததால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

கிறிஸ்டியன் ஜேர்மனியிலிருந்து வெளியேறினால் அவரை பொலிஸ் கண்காணிப்பில் வைக்கமுடியாது என அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கண்காணிப்பில் இருந்தாலும் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்க ஜேர்மன் சட்டம் அனுமதிக்கவில்லை என்று கூறி கிறிஸ்டியன் ஜேர்மனியை விட்டு வெளியேற ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று அனுமதியளித்துள்ளது.
குற்றவாளிக்கு உதவும் இரண்டு பெண்கள்
கிறிஸ்டியன் Braunschweig என்னும் நகரில் தங்கியிருந்த நிலையில், நகர மக்களுக்கு தங்கள் ஊரில் இப்படி ஒரு மோசமான குற்றவாளி இருக்கிறார் என்பது தெரியவந்த, கிறிஸ்டியனை தங்கள் ஊரிலிருந்து வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஆகவே, நகரிலிருந்து வெளியேறிய கிறிஸ்டியன், வனப்பகுதி ஒன்றில் தற்காலிக கூடாரம் ஒன்றை அமைத்து அதில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மேண்டி மற்றும் மோனா என்னும் இரண்டு பெண்கள் உதவுவதுடன், அவருக்குக் காவலாக பயங்கர நாய் ஒன்றையும் உதவிக்கு வைத்துள்ளார்கள் அந்தப் பெண்கள்.

நீங்கள் அவரைக் காதலிக்கிறீர்களா என ஊடகவியலாளர்கள் அந்தப் பெண்களைக் கேட்டபோது, இல்லை என்று கூறிய அந்த பெண்கள், நாங்கள் அவருக்கு உதவுவதற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.
இதற்கிடையில், கிறிஸ்டியன் தலைமறைவாக முயன்றாலும், அவரை விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |