மரத்தில் மோதி வெடித்துச் சிதறிய டெஸ்லா கார்; 2 பேர் தீயில் கருகிய பரிதாபம்
அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் படு வேகத்தில் சென்ற டெஸ்லா கார் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணித்த 2 பேர் தீயில் கருகி உயிரிழந்துனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சனிக்கிழமையன்று டெஸ்லாவின் 2019 Model S காரில் 2 பேர் பயணித்துள்ளார். ஒருவர் முன் பக்க பயணிகள் இருக்கையிலும், மற்றோருவர் பின்னால் உள்ள பயணிகள் இருக்கையிலும் அமர்ந்து சென்றுள்ளனர்.
ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் தன்னிச்சையாக இயங்கக்கூடிய அந்த காரில் ஓட்டுனரின் இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Houston-க்கு வடக்கே அதிவேகமாக சென்ற அந்த கார் நேவிகேஷனில் கோளாறு ஏற்பட்டு ஒரு மரத்தில் மோதி தீப்பிடித்துள்ளது. காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
விபத்து நடந்த நேரத்தில் டிரைவர் பக்க ஏர்பேக் பயன்படுத்தப்பட்டதா, காரின் டிரைவர் உதவி அமைப்பு ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெஸ்லா அதன் இணையதளத்தில், அது வழங்கும் ஓட்டுநர் உதவி அமைப்புகள் முழுமையாக தன்னாட்சி பெறாது என்றும், நிச்சயமாக ஓட்டுனரின் மேற்பார்வை இன்னும் அவசியம் என்றும் எச்சரிக்கிறது.
ஆனால், சமூகவலைத்தளங்களில் வெளியாகிவரும் வீடியோக்களில், டெஸ்லாவின் ஆட்டோ பைலட் வசதியை சோதிக்கும் விதமாக காருக்குள்ளேயே ஓட்டுனர்கள் தூங்கியபடி நீண்ட தூரம் பயணிப்பது அல்லது நீண்ட நேரம் ஸ்டேரிங்கை பயன்படுத்தாமேலே பயணிப்பது போன்ற வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், டெஸ்லா காரில் விபத்து ஏற்பட்டு 2 பேர் கருக்குள்ளேயே தீயில் கருகி பக்லியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.