15 வயது சிறுமியை மாதக்கணக்கில் சீரழித்த 2 முதியவர்கள்! ஒற்றை புகைப்படத்தை காட்டி மிரட்டியது அம்பலம்... அதிரவைக்கும் பின்னணி
தமிழகத்தில் 15 வயது பள்ளி மாணவியை மாதக்கணக்கில் சீரழித்த இரண்டு முதியவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி மாணவருடன் பேசிக் கொண்டு இருந்ததை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி (52) என்பவர் தனது செல்போனில் படம் பிடித்தார்.
இந்த படத்தை உனது பெற்றோரிடம் காட்டி விடுவேன் என்று கூறி சிறுமியை மிரட்டி கடந்த ஜனவரி மாதம் முதல் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதே படத்தை காட்டி மணியின் நண்பரான கனகராஜ் (57) என்பவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து சிறுமியின் தாய் விசாரித்த போது நடந்த விபரங்களை கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் பொலிசார் மணி, கனகராஜ் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.