ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மனியில் இரண்டு பேர் கைது
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின்பேரில் இரண்டுபேர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ரஷ்ய தூதருக்கு சம்மன்
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Bayreuth நகரில், ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் Dieter S. மற்றும் Alexander J. என்னும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, நேற்று, வியாழக்கிழமை, ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது, சேதம் ஏற்படுத்துதல் மற்றும் வெடிபொருட்கள் தயாரித்தல் போன்ற விடயங்களுடன் தொடர்பு, போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக, ஜேர்மனி அரசு பெர்லினிலுள்ள ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
Image: Bjoern Trotzki/IMAGO
அமைச்சர்கள் கருத்து
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஆனலேனா பேர்பாக், புடின் அவரது பயங்கரங்களை ஜேர்மனிக்குள் கொண்டுவர அனுமதிக்கமாட்டோம் என்றார்.
அத்துடன், ஜேர்மன் உள்துறை அமைச்சரான Marco Buschmannம், இந்த உளவு பார்க்கும் விடயங்களிலிருந்து, ரஷ்யா நம் நாட்டையும் குறிவைப்பது தெளிவாகத் தெரிகிறது, இந்த அச்சுறுத்தலுக்கு நாம் சரியான பதிலடி கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ் கூறும்போது, ஜேர்மனியில் இத்தகைய உளவு பார்க்கும் விடயங்கள் நடப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜேர்மனி கைது செய்துள்ள இருவரும் ரஷ்ய உளவாளிகள் என்பதற்கான ஆதாரம் எதையும் ஜேர்மனி கையளிக்கவில்லை என்று பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகம் எக்ஸில் வெளியிட்ட செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |