சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை! இளைஞரை கடத்தி சென்று கட்டி வைத்து தாக்கிய கொடூரம்.. நடந்தது என்ன?
இந்தியாவில் இளைஞர் ஒருவரை தாக்கி வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் மேக்வால். இவர் கடந்த 27ஆம் திகதி உள்ளூர் பொலிஸிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, பழைய விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதியில் மது குடிக்க வற்புறுத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்தை அடுத்து அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சாதி குறித்து இழிவாக பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து முதுகில் இருந்த காயங்களை வைத்து மேக்வாலின் தாக்கப்பட்டதை பொலிஸ் உறுதி செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் 8 பேர் வழக்கு பதிவு செய்து உமேஷ் ஜாட் மற்றும் பீர்பால் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை பொலிஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறும் போது, பாதிக்கப்பட்ட நபரின் உடலில் காயங்கள் உள்ளன. எனவே அவர் தாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. எனினும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.