இழுத்து செல்லப்பட்டனர்! பரிதாபமாக உயிரிழந்த 2 இலங்கை தமிழ் இளைஞர்கள்... சிசிடிவியில் பதிவான கட்சிகளை வைத்து விசாரணை
தமிழகத்தில் 2 இலங்கை தமிழ் இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் இலங்கை தமிழர் முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்த முகாமைச் சோ்ந்த பொன்மனச்செல்வன் (21), பிரதீபன் (16), முருகேஷ் (21) ஆகியோா் வா்ணம் பூசும் வேலை செய்து வந்தனா். இவா்கள் வேலைக்காக சனிக்கிழமை இரவு பண்ணாரி சென்றுள்ளனா்.
அங்கு நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
கொத்தமங்கலம் மொக்கை என்ற இடம் அருகே வந்தபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், இவா்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூவரும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனா்.
இதில் பொன்மனச்செல்வன், பிரதீபன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த முருகேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்து குறித்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.