அதிகரிக்கும் மோதல் அச்சம்... பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் என பிரித்தானியா எச்சரிக்கை
உக்ரைன்-ரஷ்யா இடையே மோதல் ஏற்படும் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உக்ரைனுக்கு அத்தியாவசியமின்றி பயணிக்க வேண்டாம் என குடிமக்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லை பகுதிக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அதேசமயம், பிரித்தானியா, அமெரிக்கா நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன.
இந்நிலையில், மோதல் அச்சம் அதிகரித்து வருவதால் பிரித்தானியர்கள் அத்தியாவசியமின்றி உக்ரைனுக்கு பயணிக்க வேண்டாம் என பிரித்தானியா வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், உக்ரைனில் உள்ள பிரித்தானியா குடிமக்கள் அவர்களின் இருப்பை பதிவு செய்ய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.