உலக பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக சுவிஸ் வங்கி வெளியிட்ட அறிக்கை
உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
268 பேர் பில்லியனர்
சுவிஸ் வங்கியான யூ.பி.எஸ் நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பில்லியனர்கள் குறித்த ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி பில்லியனர்களின் எண்ணிக்கை 1,757யில் இருந்து 2,682 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் மட்டும் 268 பேர் பில்லியனர்களாக உருவெடுத்துள்ளார். இவர்கள் அனைவரும் சுயதொழில் மூலமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு 58.5 சதவீதம் உயர்ந்து 6.1 ட்ரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்க பில்லியனர்களின் சொத்து மதிப்பு 27.6 சதவீதத்தில் இருந்து 40 சதவீதத்தை தாண்டியுள்ளது.
121 சதவீதம்
இந்தியாவைப் பொறுத்தவரை 153யில் இருந்து 185 ஆக பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சொத்து மதிப்பு 905.6 பில்லியனாக உயர்ந்துள்ளது.
மேலும், 2015 முதல் 2024ஆம் ஆண்டுவரை பணக்காரர்களின் சொத்து 121 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தொழில்நுட்பம் சார்ந்த பணக்காரர்களின் சொத்து 3 மடங்கு அதிகரித்து, 788.9 பில்லியன் டொலரில் இருந்து 2.4 ட்ரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் பில்லியனர்களின் சொத்து மதிப்பு 16.8 சதவீதம் சரிந்து, 1.8 ட்ரில்லியன் டொலராக குறைந்துள்ளது.
அத்துடன் 588 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 501 ஆக சரிந்துள்ளது. இதற்கிடையில் அரசியல் பதற்றங்கள், வர்த்தக தடைகள் மற்றும் உயர்ந்து வரும் செலவினத் தேவைகளால், அடுத்த 10 ஆண்டுகளில் நிலையற்ற உலகை எதிர்கொள்ள நேரிடும் என்று யூ.பி.எஸ் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |