அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின்! பதிவிட்ட புகைப்படம்
தமிழகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதிவியேற்றுக் கொண்டார்.
அமைச்சர் பதவி
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வாக பொறுப்பு வகிக்கும் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
கிண்டியில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஊடகத்தை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன் என தெரிவித்தார்.
உதயநிதி ட்வீட்
மேலும் அவர் வெளியிட்ட பதிவில், 'எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூக நீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மொடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல், பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்' என தெரிவித்துள்ளார்.
எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். pic.twitter.com/M43S8kRcFO
— Udhay (@Udhaystalin) December 14, 2022