7 ஆண்டுகளாக சிறுமியை சீரழித்து வந்த 29 பேர்! பிரித்தானியாவில் நடந்த கொடுமைச் சம்பவம்
பிரித்தானியாவில் 7 ஆண்டுகளாக ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக 29 ஆண்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரில் 2003 மற்றும் 2010-க்கு இடையில் நடந்தேறியுள்ளது. அப்போது அச்சிறுமியின் வயது 13 முதல் 20 என கூறப்படுகிறது.
சமீபத்தில், பழைய சிறார் பாலியல் வழக்குகளை தோண்டி விசாரணை மேற்கொண்டதையடுத்து பலவிதமான பாலியல் குற்றங்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளன. அதன் அடிப்படையில் இந்த ஒரே வழக்கில் 29 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
அவர்கள் அனைவரும் வரும் ஜூலை 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பிராட்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
விசாரணையின் போது கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்கள் குற்றச்சாட்டு இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைத்து 29 ஆண்களின் பட்டியலையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் 35 முதல் 64 வயதுடைய ஆண்கள் அடங்குவர்.