பிரித்தானியாவில் 50 வயதை கடந்தவர்களுக்கு 2-வது தடுப்பூசி! பிரதமர் போரிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரித்தானியாவில் 50 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் 2-வது டோஸை போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைர்ஸ் பரவல் பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கையும் இரட்டை இலக்கை விட குறைவாக பதிவாகி வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனாவால் தவித்து வந்த பிரித்தானியா, இப்போது இந்தளவிற்கு முன்னேறியதற்கு தடுப்பூசி, அங்கு போடப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றவை தான் காரணம் என்று கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் பெரும்பாலான மக்கள் முதல் டோஸை போட்டுக் கொண்டதால், இரண்டாவது டோஸிற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜுன் மாத கடைசிக்குள், இரண்டாவது டோஸை போட்டு விட வேண்டும் என்று பிரித்தானியா அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 50 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸைச் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போரிஸ் ஜோன்சன் கூறுகையில், B1.617.2 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் நமது தளர்வு திட்டங்களுக்குத் தொந்தரவாக உள்ளது.
இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் வடக்கு இங்கிலாந்தில் வேகமாகப் பரவுகிறது. இதனைத் தொடர்ந்து 50 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வேகமாகச் செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.