காபி சாப்பிடவேண்டாம்... பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்
பிரித்தானியர்கள், இன்று மட்டும் காலை காபியைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
காபி சாப்பிடவேண்டாம்...
பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், இன்று வெப்பநிலை 34 டிகிரி செல்ஷுயஸை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில் வாழ்பவர்களுக்கு நாளை மாலை வரை, குறிப்பாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பலர் உயிரிழக்கலாம் என்று கூறும் ஆம்பர் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பம் காரணமாக இரவில் பலரும் சரியாக தூங்கியிருக்கமாட்டார்கள். அப்படியிருக்கும்போது, காலையில் எழும்போது, ஒரு காபி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுவது சகஜம்தான்.
ஆனால், காபி சாப்பிட்டால் நிலைமை மோசமாகலாம் என்பதால், இன்று காலை பிரித்தானியர்கள் காபியை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இன்றைய நாள், இந்த ஆண்டிலேயே வெப்பம் மிகுந்ததாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், காபி வெப்பத்தை அதிகரிப்பதுடன் பதற்றத்தையும் ஏற்படுத்தும். அதனால் உங்கள் செயல்திறன் பாதிக்கப்படலாம்.
வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் காபி அருந்துவதால் அதிக அளவில் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதனால், நீரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
காபி, இதயத்துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கவும் கூடும். ஏற்கனவே வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், இதனால் உடல் நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்படலாம்.
ஆகவேதான், பிரித்தானியர்கள் இன்று காலை காபியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |