பிரித்தானியாவில் உஷார்ப்படுத்தப்படும் விமான நிலையங்கள்! தப்பிய தாய்? வெளியான புகைப்படங்கள்
பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளை விபத்தில் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தாய், நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத காரணத்தினால் விமானநிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Derby-ஐ சேர்ந்த Mary McCann என்ற 35 வயது பெண் தன்னுடைய குழந்தைகளுன் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் திகதி Vauxhall Astra காரில் வந்து கொண்டிருந்த போது, Milton Keynes அருகே இருக்கும் சாலையை நெருங்கிய போது, அங்கிருந்த Scania HGV லொரி மீது பயங்கரமாக மோதியதால், விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் லொரியின் டிரைவருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்பட்வில்லை, அதே சமயம் ஒரு குழ்ந்தை தப்பிவிட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குழந்தைகளின் அத்தை Margaret McCann(26) என்பவர் கூறுகையில், லண்டனில் ஒரு விருந்திற்கு சென்று திரும்பிய போது இந்த பயங்கர விபத்து நடந்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் Mary McCann ஆஜராகும் படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது வழக்கறிஞர் Heather Stangoe காப்பாற்றப்பட்ட ஒரு குழந்தை அவர்களின் பாட்டியுடன் நலமாக உள்ளது. அதே சமயம் உயிரிழந்த குழந்தைகளுக்கான இறுதிச்சடங்கு இந்த வாரம் நடைபெறவுள்ளது.
ஆனால், இதில் குற்றவாளியாக கருதப்படும் Mary McCann எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுவதால், அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
ஆனால், அவரைத் தொடர்பு கொண்ட போதும், எந்த ஒரு பதிலும் இல்லாத காரணத்தினால், வழக்கை விசாரித்த நீதிபதி அவரை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் அயர்லாந்திற்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், விமானநிலையங்கள் உஷார் நிலையில் இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.