பிரித்தானியாவில் தடுப்பூசிக்கு பின் கொரோனா உயிரிழப்பு குறைந்திருக்கிறதா? இல்லையா? கடந்த 24 மணி நேரத்தில் பதிவான தகவல்
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 3,568 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியாவில் தடுப்பூசி முறை அவசரகால நடவடிக்கையாக போடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா உயிரிழப்பும் ஏற்பட்டு தான் வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பிரித்தானியாவில் கொரோனாவின் இறப்பு எண்ணிக்கை 127,000-ஆக உயர்ந்துள்ளது. 3568 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4.3 மில்லியனை தொட்டுள்ளது.
இதுவரை பிரித்தானியாவில் 40 மில்லியன் பிரித்தானியர்கள் தங்களுடைய முதல் டோஸ் குரிய கொரோனா தடுப்பூசியை போட்டுள்ளனர்.
அதே போன்று 7.6 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தங்களது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து மக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதால், இன்று முதல் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தார். அதன் படி, அத்தியாவசிய கடைகள், ஜிம்கள் மற்றும் சிகையலங்கார கடைகள் போன்றவை நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகளின் போது போரிஸ் ஜோன்சன், மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், திங்களன்று கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை மட்டுமே, சமூக தொலைதூர விதிகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.