ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படக்கூடிய புதிய சிகிச்சைக்கு பிரித்தானியா ஒப்புதல்!
கொரோனா வைரஸால் ஏற்படுத்தும் இறப்பு அபாயத்தை 80% குறைக்கும் புதிய கொரோனா சிகிச்சைக்கு பிரித்தானியா ஒப்புதல் அளித்துள்ளது.
GSK மற்றும் Vir Biotechnology உருவாக்கிய Xevudy, sotrovimab மருந்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரித்தானியா மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) அறிவித்துள்ளது.
கடுமையான நோய் தொற்று ஏற்படக்கூடிய அதிக ஆபத்தில் இருக்கும் லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவப் பரிசோதனைகள், இந்த மருந்தின் ஒரு டோஸ் அதிக ஆபத்துள்ள பெரியவர்கள் மத்தியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்பு அபாயத்தை 79% குறைத்துள்ளது.
புதிய ஒமைக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக இந்த சிகிச்சை பலனளிக்குமா என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாது என்று அரசாங்க செய்தி வெளியீடு கூறுகிறது.
இருப்பினும், GSK வெளியிட்ட அறிக்கையில், ஒமைக்ரான் எதிராக இந்த சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்று ஆரம்ப கட்ட மருத்துவ பகுப்பாய்வு காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளது.