பிரித்தானியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவோருக்கு ஒரு முக்கிய செய்தி
சுவிஸ் அரசு, தனது தனிமைப்படுத்தல் நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவையும் இணைத்துள்ளது. அதன்படி, நேற்று மாலை 6 மணி முதல், பிரித்தானியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருபவர்கள் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் காரணமாக, சுவிட்சர்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
எனவே, பிரித்தானியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவோர், முழுமையாக
தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும்கூட, அவர்கள் தங்களைத்
தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.