லண்டன் கால்வாயில் புதிதாக பிறந்த குழந்தை செத்து மிதந்த அவலம்! விசாரணையில் பொலிஸ்
பிரித்தானியாவில் வடமேற்கு லண்டனில் உள்ள கிராண்ட் யூனியன் கால்வாயில் புதிதாகப் பிறந்த குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் சடலம் ஓல்டு ஓக் லேன் அருகில் Willesden மற்றும் Park Royal இடையில் உள்ள கால்வாய் நீரில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழ்நதையின் உடலை வந்த பொலிஸார் 999 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் டஜன் கணக்கான பொலிஸ், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மரணத்தின் சூழ்நிலைகளை பொலிசார் விசாரிக்கும் போது அருகிலுள்ள சாலைகள் மற்றும் பாதைகள் சுற்றி வளைக்கப்பட்டன.
மதியம் 1.19 மணியளவில் குழந்தை தண்ணீரில் காணப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
குழந்தையை அடையாளம் காண்பதற்காக இங்கிலாந்து முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் குழந்தை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா என லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Cordons are in place at the canal near Old Oak Lane NW10 where the body of a newborn baby was found in the water at 1.19pm. Investigation underway to establish circumstances. We urge the baby’s mother to seek medical assistance via 999. Anyone with info pls call 101 ref 3589/09.
— Ealing Police (@ealingMPS) May 9, 2021