பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை! போரிஸ் ஜான்சன் அறிவிக்கவுள்ள விதிமுறைகள்.. வெளியான தகவல்
பிரித்தானியாவில், வரவிருக்கும் குளிர்கால கோவிட் அலைக்கு எதிராக பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளூர் மக்களை எச்சரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாலும், அரசாங்கம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாலும், மக்கள் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாத நேரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இல்லாத அளவிற்கு, நேற்று ஒரு நாளில் 156 பேர் கோவிட் காரணமாக இருந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தாவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் மற்றொரு கோவிட் அலை அல்லது மற்றொரு நாடு தழுவிய ஊரடங்கு விதிகளை தவிர்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்த மருத்துவ நிபுணர்களிடம் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை கேட்டு வருகிறார்.
தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கினால் மீண்டும் சமூக இடைவெளி, கட்டாய முகக்கவசம் அணிதல் போன்ற சில தற்செயல் நடவடிக்கைகளை பிரதமர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் தகவல்களின்படி, ஜான்சன் அடுத்த வாரம் எதிர்காலத்தில் பள்ளிகள் மற்றும் மதுக்கடைகளை மூடுவதைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து ஒரு வரைபடத்தை வெளியிட்டு உரையாற்றவுள்ளார். அப்போது அடுத்த கோவிட் அலை குறித்து குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவுள்ளளார்.
அதே நாளில், 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்குவார் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், கோவிட் பாஸ்போர்ட்டை பெரிய அளவில், குறிப்பாக இரவு விடுதிகள், மதுக்கடைகள் மற்றும் கூட்ட நெரிசலான பொது இடங்களில் பிரதமர் அறிவிக்கும் வாய்ப்பும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"என்ன நடக்கப் போகிறது என்பதில் நிறைய நிச்சயமற்ற தன்மை உள்ளது. நாம் எதிரும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் எங்கள் தடுப்பூசி திட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது, அடுத்த வாரம் பூஸ்டர் தடுப்பூசிகள் மற்றும் குறிப்பாக குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றிய கூடுதல் விவரங்கள் எங்களிடம் இருக்கும், நாங்கள் குளிர்காலத்திற்கு முழுமையாக தயாராக இருப்பதை உறுதி செய்வோம்” என்று அந்த அரசாங்கத்த்திற்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்தது.