ஐரோப்பிய நாடுகளில் பின்தங்கிய பிரித்தானியா! ஓரிரு தினங்களில் அதிரடி அறிவிப்பை வெளியிடவுள்ள போரிஸ் ஜான்சன்!
பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் தீர்மானம் இன்னும் ஓரிரு நாட்களில் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தனையாவில் தற்போது 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது.
ஐரோப்பாவிலேயே, பிரித்தானிய அரசாங்கம் முதல் நாடாக தடுப்பூசியை வழங்க தொடங்கினாலும், தற்போதையை நிலையில், மற்ற நாடுகளை விட சற்று பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக, 12 முதல் 15 வயது பிள்ளைகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூரவ அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ் விட்டி (Chris Whitty) தலைமையிலான பிரித்தானியாவின் தலைமை மருத்துவ அதிகாரிகள், சில நாட்களுக்குள் ஒரு முடிவை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்புதல் அளிக்கப்பட்டால், செப்டம்பர் 22 முதல் பிள்ளைகளுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளிகளில் தடுப்பூசி வழங்கப்படலாம் என்று அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லண்டனில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள், இந்த திட்டத்திற்கு பச்சை விளக்கு கொடுக்கப்பட்டவுடன் இந்த வயதினருக்கு விரைவாக தடுப்பூசி போட தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.