7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கும் பிரித்தானியா
பிரித்தானியா, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளது.
பிரித்தானிய அரசு, 2028-க்குப் பிறகு முதல்முறையாக சீனாவுடன் அதிகாரபூர்வ வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளது.
இந்த முயற்சி, பிரித்தானிய நிறுவனங்களுக்கு புதிய சந்தைகளை திறக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் புதிய வர்த்தக மற்றும் தொழில்துறை செயலாளர் Peter Kyle தலைமையில், UK-China Joint Economic and Trade Commission (JETCO) கூட்டம் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.

இந்த ஓச்சுவார்தையின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் 1 மில்லியன் பவுண்டு மதிப்பிலான சந்தை அணுக்கள் வாய்ப்புகளை பெறுவது இலக்காகும்.
பிரித்தானிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் ஒப்பந்தங்களை இறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
கடந்த நிதியாண்டில், பிரித்தானியா ஏற்கெனவே 2 பில்லியன் பவுண்டு மதிப்பிலான பொருட்களை சீனாவிற்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இதில், Creative Industries மற்றும் retail துறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
விரைவாக வளர்ந்து வரும் சீனாவின் நடுத்தர வர்க்க சந்தையை பய்னபடுத்தி, பிரித்தானிய நிறுவனங்கள் உலகளாவிய வளர்ச்சியில் பங்குபெற முயற்சிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK China trade talks 2025, Peter Kyle Beijing visit, UK-China JETCO summit, UK export deals with China, British market access China, UK-China economic cooperation, UK trade secretary China trip, China middle class market UK, UK automotive exports to China