பிரித்தானியாவில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் கவனத்திற்கு: முக்கிய ஆய்விற்கு அரசு அழைப்பு!
பிரித்தானிய அரசு கலப்பு தடுப்பூசி ஆய்வை விரிவுபடுத்தியுள்ள நிலையில், அதற்கான தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸூக்கு எதிரான முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்ற 50-வட்டத்துக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய அரசு அதன் கலப்பு தடுப்பூசி ஆய்வை விரிவுபடுத்தியுள்ளது. அதாவது முதல் டோஸ் ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியும் செலுத்தி அதன் பயனை கண்டறியும் ஒரு பிரத்தியேகமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடுப்பூசிகளை இணைப்பதன் மூலம் வைரஸ் மற்றும் அதன் புதிய வகைகளுக்கு எதிராக பரந்த, நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்றும் அது தடுப்பூசி திட்டத்தை மேலும் எளிமையாக்கிவிடும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், ஃபைசர் அல்லது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை முதல் டோஸாக பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் இந்த Com-Cov எனும் Combined vaccine ஆய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு இரண்டாவது டோஸ் மீண்டும் அதே மருந்தாகவும் இருக்கலாம், அல்லது Moderna அல்லது Novavax தடுப்பூசி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
800-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே ஆராய்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்த முதல் கட்டத்தின் முடிவுகள் அடுத்த மாதம் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த விரிவாக்கப்பட்ட சோதனை முடிவுகள் ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் அறிக்கையிடத்தக்க கண்டுபிடிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஆய்வு ஒரு வருடம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.