பிரித்தானியாவுக்குள் நுழைய இனி பாஸ்போர்ட் தேவையில்லை: இவர்களுக்கு மட்டும்!
பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் பாஸ்போர்ட் சோதனை இல்லாமலே பயணிகளை அனுமதிக்கும் திட்டம் ஒன்றை சோதனை முறையில் முயற்சி செய்துள்ளது.
அதில் வெற்றியும் கிடைத்துள்ளதால், இந்த திட்டம் பல விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இனி இவர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லை!
பிரித்தானியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்பும் பட்சத்தில், அவர்களுடைய பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக இனி அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியிருக்காது.
ஆம், மான்செஸ்டர் விமான நிலையத்தில், பிரித்தானியர்கள் பாஸ்போர்ட் இல்லாமலேயே நுழையும் திட்டம் ஒன்று அக்டோபர் மாதம் முதல் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
அதாவது, அவர்கள் e- gates என்னும் மின்னணு நுழைவாயில் வழியாக விமான நிலையத்துக்குள் நுழையும்போதே, AI உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள கருவிகள், அவர்களுடைய முகங்களை ஸ்கேன் செய்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களை விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கும்.
ஆகவே, அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனையிடுவதற்காக வரிசையில் காத்திருக்கவேண்டியதில்லை.
விடயம் என்னவென்றால், இப்போதைக்கு இந்த வசதி பிரித்தானியர்களுக்கு மட்டும்தான்.

போகப்போக, அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.
ஒரே ஒரு விடயம் என்னவென்றால், பயணிகள் சீக்கிரமாக விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டுவிடுகிறார்கள். ஆனால், அவர்களுடைய சூட்கேஸ்கள் முதலான பொருட்கள் வந்து சேர தாமதமாகிறது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |