கத்தியால் குத்தப்பட்ட பிரித்தானியா எம்.பி சிகிச்சை பலனின்றி மரணம்! தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது நடந்த பயங்கரம்
பிரித்தானியாவில் தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட கன்சர்வேடிங் எம்.பி சர் டேவிட் அமெஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எசெக்ஸில் உள்ள Southend West தொகுதி எம்.பி-யான சர் டேவிட் அமெஸ், வெள்ளிக்கிழமை Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் நடந்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது குத்தியால் குத்தப்பட்டார்.
தொகுதி மக்களுடனான கூட்டத்திற்குள் திடீரென நுழைந்த நபர், கத்தியால் சர் டேவிட் அமெஸ்-ஐ பலமுறை குத்தியாக கூறப்படுகிறது.
காயமடைந்த 69 வயதான சர் டேவிட் அமெஸ்-க்கு சம்பவயிடத்திலேயே வைத்து 2 மணிநேரத்திற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சர் டேவிட் அமெஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவயிடத்தில் பொலிசார் இருப்பதாக கூறப்படுகிறது மற்றும் அந்த இடத்தை சுற்றியுள்ள சாலை மூடப்பட்டுள்ளது.
A man's been arrested following an incident in #LeighonSea.
— Essex Police (@EssexPoliceUK) October 15, 2021
We were called to reports of a stabbing in Eastwood Rd North shortly after 12.05pm.
A man was arrested shortly after & we're not looking for anyone else.
We'll bring you more info when we have it. pic.twitter.com/U3dU7btoz7
மேலும், சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் நபரை ஒருவரை கைது செய்ததாக எசெக்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.