யூரோ 2020 இறுதிப்போட்டியில் குழப்பம் செய்தவர்கள் யார்? 10 பேரது புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸ்
யூரோ 2020 இறுதிப் போட்டியின் போது லண்டன் வெம்பிளி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக 10 நபர்களின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11-ஆம் திகதி இங்கிலாந்துக்கும் இத்தாலிக்கும் இடையில் யூரோ 2020 இறுதிப் போட்டி நடைபெற்றது.
ஆட்டத்தை நேரில் காண 60,000-க்கும் மேற்பட்ட டிக்கட்டுகள் விற்கப்பட்டிருந்தன. அனால் அன்றைய நாளில் போட்டியின்போது, வெம்பிளி விளையாட்டரங்கத்தில் சுமார் 2,500 பேர் தீக்கடடுகள் இல்லாமல் அரங்கத்தில் நுழைந்தனர்.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மைதான நுழைவாயில்களில் தடுப்புப் பலகைகள் எல்லாம் உடைக்கப்பட்டு, கூட்டம் கூட்டமாக அடையாளம் தெரியாத பலர் அரங்கத்தில் ஊடுருவினர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், அரங்கத்தைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு பொலிஸார், தற்போது குழப்பத்திற்கு காரணமாக இருந்த சிலரை அடியாளம் கண்டுள்ளனர்.
அவர்களை விசாரித்தால், பல கேள்விகளுக்கு பதில் கிதாய்க்கும் என 10 நபர்களுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும், துல்லியமான விசாரணையை மேற்கொண்டு, விளையாட்டரங்கத்தில் உண்மையில் நிகழ்ந்த பிற குற்றங்களை விரைவில் அடையாளம் காணப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.