பிரித்தானியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 0! ப்ளீஸ் இதை பாலோ பன்னுங்க... நடிகை கஸ்தூரி போட்ட பதிவு
பிரபல திரைப்பட நடிகையான கஸ்தூரி, பிரித்தானியாவில் கொரோனா பரவல் எப்படி குறைந்தது என்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் டுவிட் பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால், அங்கு நாள்தோறும் இரண்டாயிரம் பேர் முதல் 5000-பேர் வரை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், கொரோனாவால் பிரித்தானியா நிலைகுலைந்து போய்விடுமோ என்று இருந்தது. ஆனால் உடனடியாக பிரித்தானியா அரசு அவரசர கால நடவடிக்கையாக தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டு வந்து, பொதுமக்களுக்கு போடப்பட்டது.
அதோடு மட்டுமின்றி முகக்கவசம் கட்டாயம், தனி மனித இடைவெளி கட்டாயம், முழு ஊரடங்கின் கடுமையான கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதித்தது.
இதனால் கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வந்தது. அங்கிருக்கும் மக்களில் பாதி பேர் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
வரும் ஜுன் மாத இறுதிக்குள் அனைவருக்கும் இரண்டாவ்து டோஸ் போட்டுவிட வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
UK Covid deaths are 0 Now.
— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2021
Social distance, Mask , vaccinate. It worked for them. Will work for us.
Please educate/persuade as many as possible about the importance of these for your own sake !
இதன் பயனாக பிரித்தானியாவில் தற்போது கொரோனா பலி எண்ணிக்கை கிட்டத்தட்ட 0 ஆகிவிட்டது என்று நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், பிரித்தானியாவில் சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளால், இப்போது அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 0-வை நெருங்கிவிட்டது.
இதனால் இதன் முக்கியத்துவத்தை முடிந்தவரை பலருக்கும் வற்புறுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.