பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்வு! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
பிரித்தானியாவில் இன்று முதல் அனைத்து விதமான கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது.
நாள்தோறும் 50,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், சமீபத்தில் கூட பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதியானது.
இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு தளர்த்தியுள்ளது.
இரவுநேர விடுதிகளை மீண்டும் திறக்கவும், எந்த வித கட்டுப்பாடுகளின்றி திரையரங்கு உள்ளிட்டவற்றை திறக்கவும் நேற்று இரவு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்து பணி செய்வது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது.
இதற்கு விஞ்ஞானிகள் மற்றும் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இப்போது, இதை செய்யவில்லையெனிலும், இலையுதிர் காலத்திலும் குளிர்காலத்திலும் திறந்துதான் ஆக வேண்டும்.
குளிர்காலம் என்பதால் அப்போது வைரஸ் பரவும் அபாயம் அதிகம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதை விமர்சித்துள்ள தொழிலாளர் கட்சி சுகாதார செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் அஷ்வொர்த், அரசு பொறுப்பற்று செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.