பிரித்தானியாவில் கொரோனா தொற்றை குறைய இதுவே முக்கிய காரணம்! சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
பிரித்தானியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதற்கு, தடுப்பூசி முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின், இங்கிலாந்து, லண்டன் போன்ற பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. இதனால், பிரித்தானியாவில் நாள்தோறும் ஏராளமனோர் கொரோனாவால் உயிரிழந்து வந்தனர்.
ஆனால், கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதியளவு குறைந்துள்ளது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு 2000-க்கும் குறைவான மக்கள் பாதிக்கப்படுவதுடன், இரட்டை இலக்க பலிகளே ஏற்பட்டு வருகின்றன.
இதையும் கட்டுப்படுத்த பிரித்தானியா அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து சுகாதாரத் துறை அதிகாரிகள், நாடு முழுவதும் கொரோனா தொற்று நம்ப முடியாத அளவு குறைந்துள்ளது.
மார்ச் மாதத்திலிருந்த கொரோனா தொற்று தற்போது பாதியாகக் குறைந்துள்ளது. தொற்று குறைந்தத்தில் தடுப்பூசிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. நாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம்.
இருப்பினும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்துவதில் பிரித்தானியா, அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.