இலங்கையில் தேனிலவு! உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் நிச்சயதார்த்தம்.. பல தடைகளை தாண்டி வாழ்வில் இணைந்த பிரித்தானிய ஜோடி
பிரித்தானியாவை சேர்ந்த இளம் ஜோடிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் பிரச்சினைகளை மீறி சமீபத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவின் Penrith-ஐ சேர்ந்தவர் ஜோ ராபெல் (29). Warcop-ஐ சேர்ந்தவர் ஷனான் லேம்பர்ட் (26). இவர்களுக்கு கடந்த 2018ல் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதன்பின்னர் திருமணம் செய்ய முயன்றும் சூழ்நிலை அவர்களுக்கு கை கொடுக்கவில்லை, இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்தில் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தம்பதியை திருமணத்தின் போது தான் அவர்கள் சந்தித்தனர்.
திருமணத்துக்கு பின்னர் ஜோ மற்றும் ஷனான் ஆகிய இருவரும் Cyprus நாட்டுக்கு ஒருவாரம் தேனிலவு சென்றனர், பின்னர் சில வாரங்கள் இலங்கையில் தங்கள் தேனிலவை கொண்டாடிவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.
காதல் தொடங்கி கல்யாணம் வரை முடிந்த இவர்களின் கதை சுவாரசியமானது. புதுப்பெண் ஷனான் கூறுகையில், என் தோழியும், ஜோவின் தோழனும் காதலித்து வந்தனர். இவர்கள் மூலமே நானும், ஜோவும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம்.
ஜோ எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதை பார்த்து வியந்திருக்கிறேன் மற்றும் அவர் எளிதாக பழகுவது எனக்குப் பிடித்திருந்தது. அதே போல அவருக்கும் என்னை பிடித்திருந்தது, இருவரும் எங்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டோம்.
இதையடுத்து கடந்த 2018ல் உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. எனக்கு இது பெரிய சர்ப்பரைஸ் தான், இந்த ஏற்பாடுகளை எல்லாம் ஜோ தான் ரகசியமாக செய்தார்.
இதன்பின்னர் ஒரு கட்டத்தில் ஜோவின் தாத்தாவும், பின்னர் என் பாட்டியும் உயிரிழந்தனர். இதன் காரணமாக எங்கள் திருமணம் தள்ளி போனது.
இதனை தொடர்ந்து மே 2020ல் மணக்க முடிவு செய்த போது கொரோனா வைரஸ் அதற்கு முட்டுகட்டை போட்டது. இப்போது பல சிக்கல்களை தாண்டி இருவரும் வாழ்வில் இணைந்துள்ளோம் என கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022