பிரித்தானியாவில் கொரோனா எண்ணிக்கை கோடியை தாண்டியது! 1.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கோடியை தாண்டியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், தற்போது திடீரென்று மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதில் பாதிப்பு தீவிரமாக உள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,584 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரத்து 647 ஆக உள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் 143 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த கொரோனா பலி எண்ணிக்கையை 1,45,424-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது,