பிரித்தானியாவில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது? தற்போதைய நிலை என்ன? முன்னரே ஊரடங்கு தளர்வு வருமா?
பிரித்தானியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு வாரத்தில் அதிமாகி வருவது தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் பிரித்தானியாவில் கொரோனா பரவல் என்பது கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வந்தது. அதன் காரணமாக, தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
ஆனால், கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், பிரித்தானியாவில் பல பகுதிகளில் பரவி தற்போது மீண்டும் ஊரடங்கிற்குள் மக்களை உட்கார வைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொரோனாவால் 10,663 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவே கடந்த வாரம் திங்கட் கிழமை கொரோனாவால் புதிதாக 7742 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மூன்று பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது அதுவே, 10,663-ஆக அதிகரித்துள்ளதால், பிரித்தானியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் திங்கட் கிழமை கொரோனா பாதிப்பையும், இந்த வாரம் திங்கட் கிழமை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் ஒப்பிட்டு பார்த்தால், ஒரு வாரத்தில் 37 சதவீதத்திற்கு அதிகமாக பாதிப்பு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், சமீப நாட்களாக கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது தவிர, இறப்பு என்பது அந்தளவிற்கு அதிகரிக்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜோன்சன், வரும் ஜுலை 19-ஆம் திகதிக்குள், தடுப்பூசி விஷயத்தில் ஒரு புதிய இலக்கை நிர்ணயித்துள்ளதாக கூறினார்.
இன்று Hertfordshire-ல் உள்ள ஆய்வகத்தை ஆய்வு செய்ய வந்த போரி ஜோன்சன், நாம் தற்போதைக்கு எங்கிருக்கிறோம் என்று பார்க்கும் போது, ஏராளமான காணக்கூடிய கொரோனா வைரஸுடன் இருக்கிறோம் என்பதை அறிய முடிகிறது.
குறிப்பாக, ஆல்பா, டெல்டா மற்றும் கப்பா போன்ற உருமாறிய வைரஸ்களிடம் தடுப்பூசியின் செயல்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை பார்க்கப்போகிறோம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அரசாங்கம் 81.6 சதவீதம் வயது வந்தோருக்கான முதல் தடுப்பூசி அளவைப் போட்டுள்ளது. அதே நேரத்தில் 59.5 சதவீதம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.
மேலும், வரும் 5-ஆம் திகதி ஊரடங்கில் சில தளர்வுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்த அறிவிப்பை அரும் 28-ஆம் திகதி பிரதமர் அறிவிப்பார் என்று பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.