'கொஞ்ச நாள் பொறுங்க' பிரித்தானிய அரசு முக்கிய அறிவிப்பு!
12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிட் தடுப்பூசியை பெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் காத்திருக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட, அதிக ஆபத்தில் இருக்கும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுவதை தற்போதைய நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, அடுத்த 4 வாரங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்க சுகாதார அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்திருந்தனர்.
ஆனால், 2.8 மில்லியன் தகுதியுள்ள 12-15 வயதுடையவர்கள் தடுப்பூசி போடுவதை, தற்போதைய விகிதத்தில் தொடர்ந்தால், சில இளைஞர்கள் தங்களுக்கான தடுப்பூசியை பெற அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை ஆகலாம் என்றும், அதனால் மற்றவர்களுக்கு ஐந்து மாத இடைவெளி ஏற்படலாம் என கணக்கிடப்படுகிறது.
சமீபத்திய பகுப்பாய்வின்படி, கடந்த நான்கு வாரங்களில், ஒவ்வொரு வாரமும் 1,47,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
மேலும் சமீபத்திய தரவுகளின்படி, கிட்டத்தட்ட 60% குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை, அதே நேரத்தில் 42.1% பேர் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
பிரித்தானியாவில் கோவிட் தொற்று பதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் மொத்தம் 42,484 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு நாட்களில், நாட்டில் மொத்தம் 978 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நவம்பர் 22 அன்று, 50,800,732 பேர் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர், மேலும் கடந்த 48 மணி நேரத்தில் 46,186,817 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
WHO வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பா முழுவதும் மொத்த COVID இறப்புகள் 2 மில்லியனைத் தாண்டக்கூடும் என எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.