பிரித்தானியாவின் கொரோனா உத்தி இதற்கு சமமானது! கடுமையாக விமர்சித்த ஜேர்மன் அமைச்சர்
பிரித்தானியா அரசாங்கத்தின் தற்போதைய கொரோனா வைரஸ் உத்தி நெறிமுறையற்றது என ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் விமர்சித்துள்ளார்.
பிரித்தானியா அரசாங்கத்தின் தற்போதைய கொரோனா வைரஸ் உத்தி குறித்து ஜேர்மன் சுகாதார அமைச்சர் Karl Lauterbach கூறியதாவது, அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் இருந்தபோதிலும் கடுமையான நடவடிக்கைகளை விதிக்காத பிரித்தானியா அரசாங்கத்தின் முடிவு, பெரியளவிலான நோய்த்தொற்று கொள்கைக்கு சமமானது.
ஜேர்மனியில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே தடுப்பூசி விகிதம் குறைவாக இருப்பதால், பிரித்தானியா தேர்ந்தெடுத்த உத்தியை தான் பரிந்துரைக்க மாட்டேன்.
பிரித்தானியாவை போல் அதே கொரோனா இறப்பு விகிதத்தை ஜேர்மனி கொண்டிருந்திருந்தால், இரண்டு மடங்கு அதிகமான உயிரிழப்புகளைக் கண்டிருக்கும் என Karl Lauterbach கூறினார்.
ஜேர்மன் சுகாதார அமைச்சரான Karl Lauterbach, மருத்துவர் மட்டுமின்றி தொற்றுநோயியல் நிபுணர் கூட என்பது குறிப்பிடத்தக்கது.