திருமண இரவில் மனைவியை கொன்று சூட்கேஸில் மறைத்துவிட்டு, புகார் கொடுத்த கணவர்., 21 ஆண்டுகள் சிறை
பிரித்தானியாவில் திருமணமான இரவே மனைவியை அடித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் தனது மனைவியின் உடலை சூட்கேஸில் அடைத்து வீசிவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடினார்.
பிரித்தானியாவில் திருமண நாள் இரவில் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை சூட்கேஸில் அடைத்த நபருக்கு குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாமஸ் நட், (46) கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் திகதி டான் வாக்கரை (52) திருமணம் செய்துகொண்டார். அன்று இரவே அவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் லைட்கிளிஃப்பின் ஷெர்லி குரோவில் உள்ள வீட்டில் நடந்தது.
பின்னர் தனது மனைவி காணாமல் போனதாக நட் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் திகதி பொலிஸை அழைத்துள்ளார். பொலிஸார் அப்பெண்ணை தேடிய நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு அவளது உடல் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது. அது ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு, தம்பதியரின் மேற்கு யார்க்ஷயர் வீட்டிற்குப் பின்னால் உள்ள புதர்களில் வீசப்பட்டது.
பின்னர் விசாரணையில் தாமஸ் நட் தான் தனது மனைவியை கொலை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சிசிடிவி கமெராவில் அவர் ஒரு சூட்கேஸை வெளியே இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த காட்சியில் அவர், சூட்கேஸ் இழுத்துச் சென்ற அடையாளத்தை அழிப்பதும் பதிவாகியுள்ளது.
பின்னர் தொடர்ந்து விஷ்ரபை செய்ததில், தாமஸ் நட் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் கொலை செய்யும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை, அவரை அடித்தபோது அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
வாக்கரின் உடலை அப்புறப்படுத்த முயற்சிக்கும் முன் ஒரு அலமாரியில் சேமித்து வைத்திருந்ததாக்க நட் போலீசில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், தாமஸ் நட்டுக்கு குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.