பிரித்தானியாவில் பள்ளி குழந்தையை துஷ்பிரயோகம் செய்ய உதவிய துணைத் தலைமை ஆசிரியை கைது! அதிர்ச்சியூட்டும் சம்பவம்
பிரித்தானியாவில் ஒரு தொடக்கப் பள்ளியின் பெண் துணைத் தலைமை ஆசிரியர் ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரத்தில் உள்ள Tyldesley பகுதியில் உள்ளது செயின்ட் ஜார்ஜ் சென்ட்ரல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து தொடக்கப் பள்ளி.
இப்பள்ளியில், மான்செஸ்டர் பெருநகரத்தின் Hindley-ஐ சேர்ந்த 44 வயதாகும் ஜூலி மோரிஸ் (Julie Morris) துணைத் தலைமை ஆசிரியராக உள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளாக அதே பள்ளியில் கணிதம் மற்றும் மதக் கல்வி (RE) ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், அப்பள்ளியில் படிக்கும் ஒரு 13 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமியை Eccleston, Merseyside பகுதியை சேர்ந்த டேவ் மோரிஸ் (Dave Morris) எனும் 53 வயதாகவும் ஒரு நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய ஜூலி மோரிஸ் உதவியதாக குற்றம் சட்டப்பட்டுள்ளார்.
மேலும், மற்றோரு 13 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமைகளுக்கு தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணைத் தலைமை ஆசைரியரான ஜூலி மோரிஸ் மற்றும் டேவ் மோரிஸ் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், டேவ் மோரிஸ் மீது, 13 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமியை 3 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காகவும், மற்றோரு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைகளுக்கு தூண்டிய குற்றத்திற்காகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு வரும் ஆக்டொபர் 4-ஆம் திகதி, திங்கட்கிழமை, லிவர்பூலில் உள்ள கிரௌன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் மெர்ஸிசைடு பொலிஸார் கூறியுள்ளனர்.
தொடக்கப்பள்ளியில் நடந்துள்ள இந்த சம்பவம், பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.