தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகும்... ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் பிரித்தானியர்கள் அச்சம்
தபால் ஓட்டு தாமதமாவதால் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகலாம் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் பிரித்தானியர்கள் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தபால் ஓட்டு தாமதமாவதாக
தபால் ஓட்டு தாமதமாவதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்படுகிறது. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பிழை, Brexit உள்ளிட்டவையும் காரணமாக குறிப்பிடுகின்றனர். மட்டுமின்றி, இத்தாலியில் வசித்துவரும் பிரித்தானியர் ஒருவர் தெரிவிக்கையில்,
உரிய நேரத்தில் தமது தபால் வாக்கை அஞ்சல் துறை கொண்டு சேர்க்குமா என்ற சந்தேகமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்பதால், இந்தமுறை பிரித்தானியாவுக்கு சென்று வாக்களிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவில் வசிக்கும் ஒருவர் சுமார் 38 பவுண்டுகள் செலவிட்டு, DHL ஊடாக அனுப்பி வைத்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக பிரான்சில் இருந்து தமது வாக்குகளை அனுப்பி வரும் ஒருவர், தற்போது Brexit காரணமாக தபால் ஓட்டு தாமதமாவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல்
Brexit முடிவாகும் முன்னர் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான கடிதப் போக்குவரத்து வெறும் 3 நாட்களில் முடிய, தற்போது ஒருவார காலம் எடுத்துக்கொள்வதாக பிரித்தானியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் தமது வாக்கானது பிரித்தானியாவில் சேர்ப்பிக்கப்படுமா என்பதிலும் தமக்கு கவலை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரான்ஸ், இத்தாலி, போர்த்துகல் மற்றும் ருமேனியா உள்ளிட்ட பதினேழு நாடுகள் வெளிநாட்டு தொகுதிகளை செயல்படுத்துகின்றன.
மொத்தமுள்ள வாக்காளர்களில் தபால் வாக்காளர்கள் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |