தடுப்பூசி திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டிய பிரித்தானியா! மாட் ஹான்காக் பெருமிதம்
பிரித்தானியாவில் இன்று முதல் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 2 வாரங்களாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்) முதல் 25 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசிக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 3 மில்லயன் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார செயலாளர் Matt Hancock தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாக தடுப்பூசி இருக்கும் நிலையில், பிரித்தானியா அதன் தடுப்பூசி திட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதிய மைல்கல்லை எட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் நாட்டில் 13,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைத் தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
மேலும், பிரித்தானியாவில் உள்ள பெரியவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.