ரஷ்ய தூதரை வெளியேற்றிய பிரித்தானியா., தூதரக பதற்றம் அதிகரிப்பு
பிரித்தானிய அரசு ரஷ்ய தூதரை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளது.
மாஸ்கோவில் பிரித்தானிய தூதரக அதிகாரியை வெளியேற்றிய ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
ரஷ்யாவின் நடவடிக்கை நியமற்றது என்றும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் பாதிக்கும் என்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தூதரை வெளியேற்றுவது, லண்டன் மற்றும் மாஸ்கோ இடையிலான தூதரக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ரஷ்யா, பிரித்தானிய அதிகாரியை வெளியேற்றியதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
ஆனால், உக்ரைன் போருக்கு பிரித்தானிய ஆதரவு மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் காரணமாக இரு நாடுகளின் உறவுகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன.
ரஷ்யாவின் நடவடிக்கை தூதரக மரியாதைக்கு எதிரானது என்று கூறியுள்ள பிரித்தானியா, தனது தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையில் பதிலடி நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வருவதை வெளிப்படுத்துகிறது. உக்ரைன் போரின் தாக்கம், உலகளாவிய தூதரக உறவுகளிலும் தீவிரமாகப் பிரதிபலிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#UKRussia #DiplomaticRow #EnvoyExpelled #Moscow #ForeignPolicy #UkraineWarImpact #GlobalPolitics #BreakingNews #InternationalRelations #London