ஈரான் போரின் தாக்கம்: பிரித்தானியா 35 பில்லியன் பவுண்டு இழப்பு
ஈரான் போரின் விளைவாக, பிரித்தானியா இந்த ஆண்டு 35 பில்லியன் பவுண்டு பொருளாதார இழப்பை சந்திக்கக்கூடும் என தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனம் (NIESR) எச்சரித்துள்ளது.
NIESR வெளியிட்ட அறிக்கையில், சிறந்த சூழ்நிலையிலும் 2026 மற்றும் 2027-இல் வளர்ச்சி வீதம் குறையும் என்றும் எரிசக்தி விலை உயர்வு குடும்பங்களையும் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
2026-க்கான வளர்ச்சி கணிப்பு 0.9 சதவீதமாகவும், 2027-ல் 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மோசமான சூழ்நிலையில், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 140 டொலருக்கு சென்றால், பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, வட்டி விகிதம் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எரிசக்தி விலை உயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் இந்த நிலை, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசுக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளது. பொருளாதார நம்பிக்கை குறைந்து, அரசின் கடன் செலவுகள் அதிகரித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#UKEconomy #IranWar #RecessionRisk #Inflation #OilPrices #BreakingNews #GuardianReport