NHS கொரோனா செயலியால்... பிரித்தானியாவில் உணவு பற்றாக்குறை
பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு கட்டாயப்படுத்தப்படும் நிலையில் உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால், NHS கொரோனா செயலி நமது பாதுகாப்பு கருதி சுய தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தும்.
அந்தவகையில் சமீப நாட்களில் பல மில்லியன் மக்கள் குறித்த செயலியால் சுய தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் தற்போது நாடு முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பல தொழில் நிறுவனங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வணிக வளாகங்களில், பல்பொருள் அங்காடிகளில் உணவு பண்டங்கள் காணப்படும் வரையில் இதன் தாக்கம் புரியப்போவது இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டெல்டா மாறுபாடு காரணமாக சமீபத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு அதிகரித்து வருகிறது. இதனால் சுய தனிமைப்படுத்துதல் நடவடிக்கையும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 500,000 மக்கள் முதல் முறையாக குறித்த செயலியால் எச்சரிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்த கோடை காலத்தில் இது பல மில்லியன் மக்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பலாம் என்றே கணக்கிடப்படுகிறது.
பல தொழில் நிறுவனங்கள் 20% வரையில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. இதில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.
அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறினால், உணவு உள்ளிட்ட முக்கிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என முக்கிய நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.