போலி கல்விச்சான்றிதழ் மூலம் பிரித்தானிய விசா: மூன்று பேர் கைது
இந்தியாவின் மும்பையிலிருந்து வெளிநாடு செல்ல இருந்த இருவர், போலி கல்விச்சான்றிதழ் மூலம் பிரித்தானிய விசா பெற்றது தெரியவந்துள்ளது.
மூன்று பேர் கைது
மும்பையிலிருந்து பிரித்தானியா செல்ல புறப்பட்ட ஒரு ஆண் மற்றும் பெண்ணை சந்தேகத்தின்பேரில் விசாரித்த பொலிசார், அவர்களுடைய கல்விச்சான்றிதழ்கள் போலியானவை என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
கௌரிபென் (Gauriben Brijesh Kumar Patel) மற்றும் கிருஷ்ணகுமார் (Krishnakumar Kalpesh Kumar Patel) என்னும் அந்த இருவரையும் பொலிசார் விசாரித்தபோது, கௌரிபென் 27 லட்ச ரூபாய் கொடுத்து B.Tech சான்றிதழையும், கிருஷ்ணகுமார் 15 லட்ச ரூபாய் கொடுத்து B.Com சான்றிதழையும் வாங்கியதாக தெரிவித்துள்ளார்கள்.
அந்த போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தித்தான் அவர்கள் பிரித்தானிய விசா பெற்றுள்ளார்கள். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு போலி சான்றிதழ்களும் விசாவும் ஏற்பாடு செய்துகொடுத்த குஜராத்தைச் சேர்ந்த Raunak Joshi என்னும் ஏஜண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கௌரிபென்னும் கிருஷ்ணகுமாரும் பிரித்தானியா சென்றதும் ஏஜண்டுக்கு பணம் கொடுப்பதாக பேசி முடிவு செய்துகொண்டு புறப்பட்ட நிலையில், அவர்கள் பிரித்தானியாவுக்கு விமானம் ஏறும் முன்பே சிக்கிக்கொண்டதால் அவர்கள் மூன்று பேருடைய திட்டமும் பலிக்காமல் போய்விட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |