காஸாவில் பிரித்தானிய ராணுவம் களமிறக்கப்படலாம்: வெளிவரும் புதிய தகவல்
இஸ்ரேலின் தாக்குதலுக்கு இரையாகியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு உதவ பிரித்தானியத் துருப்புக்கள் காஸாவில் தரையிறங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மனிதாபிமான உதவிகள்
காஸாவில் மனிதாபிமான உதவிகள் முன்னெடுப்பதில் இஸ்ரேல் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் காஸா மக்களுக்கு விமானத்தில் இருந்து பொதிகளை வீசி உதவி வருகிறது.
இந்த நிலையில், அடுத்த மாதம் உதவித் தளம் ஒன்று திறக்கப்ப இருக்கும் நிலையில், பிரித்தானிய துருப்புகளை களமிறக்க ரிஷி சுனக் அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆனால் இது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இன்னும் பிரதமரின் பார்வைக்கு கொண்டுசெல்லப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சர்வதேச நேச நாடுகளின் உதவிகள் காஸா மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கையில் பிரித்தானியா எப்போதும் முன்வரிசையில் இருக்கும் என்றே பாதுகாப்பு செயலர் Grant Shapps தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இது மிக சிக்கலான விடயம் என்றும், பிரித்தானிய துருப்புகள் ஹமாஸ் அல்லது அதுபோன்ற ஆயுதக் குழுக்களால் தாக்குதலுக்கு இலக்காகும் நெருக்கடியும் ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.
ஆறு மாதங்களுக்கும் மேலாக
காஸா மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் களமிறங்கும் பிரித்தானிய துருப்புகளை ஹமாஸ் படைகள் தாக்குவதாக கூறப்படுவது வேடிக்கையான தகவல் என்றும் சமூக ஆர்வலகர்கள் தெரிவிக்கின்றனர்.
காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகிறது. அங்குள்ள 2.2 மில்லியன் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது தெற்கு நகரமான ரஃபாவில் திரண்டுள்ளனர்.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேல் முன்னெடுத்துவரும் கொடூர தாக்குதலில் இதுவரை 34,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |