பிரித்தானியா பொதுத்தேர்தல்... ரிஷி கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு: கருத்துக்கணிப்புகள்
பிரித்தானியாவில், ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், எந்த கட்சிக்கு எவ்வளவு இருக்கைகள் கிடைக்கும் என்பது தொடர்பில் பல அமைப்புகள் கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருகின்றன.
ரிஷி கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு
சனிக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள், இந்த தேர்தல், ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவாக அமையக்கூடும் என்று கூறியுள்ளன.
Savanta என்னும் ஆய்வமைப்பு, ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தேர்தலில் 21 சதவிகித ஆதரவு மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ளது. இந்த தேர்தல், கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையலாம் என எங்கள் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன என்கிறார் ஆய்வமைப்பின் இயக்குநரான Chris Hopkins என்பவர்.
அதற்கு மாறாக, Keir Starmerஇன் லேபர் கட்சி 46 சதவிகித ஆதரவைப் பெற்றுள்ளது. Sunday Telegraph மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், லேபர் கட்சிக்கு 25 புள்ளிகள் முன்னிலை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Survation என்னும் அமைப்பின் கருத்துக்கணிப்பில், நாடாளுமன்றத்தின் 650 இருக்கைகளில், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 72 இருக்கைகள் மட்டுமே கிடைக்கும் என்றும், 200 ஆண்டுகளில் அக்கட்சி இவ்வளவு மோசமான தேர்தல் முடிவுகளை சந்திப்பது இம்முறையாகத்தான் இருக்கும் என்றும், லேபர் கட்சியோ, 456 இருக்கைகளைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு மோசமான விடயம் என்னவென்றால், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என கருதப்படுகிறது. முன்னர் பிரெக்சிட் கட்சி என அழைக்கப்பட்ட, Nigel Farageஇன் Reform UK கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சியை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி, எதிர்க்கட்சி என்னும் அந்தஸ்தைப் பெறும் என YouGuv அமைப்பின் கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |