பிரித்தானிய பூங்காவில் 6 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்! சிறுவன் கைது
பிரித்தானியாவில் பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த 6 வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் சனிக்கிழமை மாலை, பிர்மிங்காமில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ள போர்ன்வில் கிராமத்தில் இருக்கும் ரௌஹீத் பூங்காவில் நடந்துள்ளது.
பூங்காவில் தனது குடும்பத்தினருடன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி, அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.
Image: Birmingham Mail)
இதனை சிறுமியின் பெற்றோர் கவனிக்காமல் இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் மகளை காணவில்லை என தேடியபோது, சிறுமி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அருகில் சென்றபோது, அந்த இளைஞர் அங்கிருந்தது தப்பியோடினார். இது குறித்து உடனடியாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெஸ்டமிட்லண்ட்ஸ் பொலிஸார் சிறுமியை தாக்கிய 16 வயது சிறுவனை கைது செய்துவிட்டதாக அறிவித்தனர்.
Picture : Google
பொதுமக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் அந்த சிறுவனை பிர்மிங்காம் பகுதியில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த பூங்காவைச் சுற்றி உள்ள சிசிடிவி கமெரா காட்சிகளை சேகரித்து, விசாரணை மேற்கொண்டுவருவதாக அவர்கள் தெறிவித்தனர்.