8 வயது சிறுமியை சுற்றி வளைத்த மர்ம கும்பல்: பிரித்தானிய வீதியில் உயிருக்காக ஓட்டம்
பிரித்தானியாவில் 8 வயது சிறுமியை மர்ம கும்பல் ஒன்று பிடிக்க முயற்சித்ததை தொடர்ந்து அந்த சிறுமி உயிருக்காக தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பியோடிய சிறுமி
பிரித்தானியாவில் பள்ளி சிறுமி ஒருவரை மர்ம கும்பல் ஒன்று பிடிக்க முயன்று தெருக்களில் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் செஷயர்(Cheshire), எல்லெஸ்மியர் துறைமுகத்தின் நடைபாதையில் தனியாக எட்டு வயது சிறுமி அமர்ந்து இருந்த போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Google Maps
நார்தன் ரைஸ் பகுதியில் இருந்து வந்த இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சிறுமியை நெருங்கி பேச்சு கொடுத்துள்ளனர்.
பின்னர் சிறுமியை அந்த மர்ம கும்பல் பிடிக்க முயற்சித்த போது, சிறுமி உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
விசாரணையை தொடங்கிய பொலிஸார்
மர்ம கும்பலின் இந்த செயலை தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் மக்களுக்கு உறுதியளித்து வருகின்றனர்.
Getty
செஷயர் புலனாய்வு அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் விவரம் தெரிந்து இருந்தால் அல்லது வீடியோ காட்சிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக விசாரணை குழுவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்க உள்ளூர் பள்ளி உடன் நாங்கள் தொடர்பில் இணைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |