வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பாத 15 வயது பிரித்தானிய சிறுமி! அதிகரிக்கும் அச்சம்... புகைப்படத்துடன் முக்கிய தகவல்
பிரித்தானியாவை சேர்ந்த 15 வயது சிறுமி ஸ்பெயினில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக காணாமல் போன நிலையில் பொலிசார் அவசர வேண்டுகோளை வைத்துள்ளனர்.
பிரித்தானியாவின் மான்செஸ்டரை சேர்ந்த Emina Ilora என்ற 15 வயது சிறுமி கடந்த மாதம் 31ஆம் திகதி ஸ்பெயினின் Palmaவில் இருந்து காணாமல் போனார்.
அதன்படி தங்கள் மகள் வெளியில் சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கே திரும்பவில்லை என Eminaவின் பெற்றோர் அன்றைய தினம் பொலிசில் புகார் அளித்தனர்.
கிட்டத்தட்ட Emina மாயமாகி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் அவர் குறித்து அச்சங்கள் அதிகரித்துள்ளது.
சிறுமி காணாமல் போன வழக்கு அதிக முன்னுரிமை கொண்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் கூறுமாறு பொலிசார் அவசர கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் Eminaவின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.