பிரித்தானியாவில் பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து சென்ற மாணவிக்கு நேர்ந்த நிலை! வெளியான புகைப்படம்
பிரித்தானியாவில் 11 வயது பள்ளி மாணவி மூக்குத்தி அணிந்து பள்ளிக்கு சென்றதற்காக நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டதாக அவரின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Leicester நகரை சேர்ந்தவர் கரீன் லுன். இவர் மகள் மேக்கி (11). கடந்த மாதம் லுன் குடும்பம் சுற்றுலா சென்ற நிலையில் அங்கு தாயாரின் அனுமதியோடு சிறியளவில் மூக்குத்தியை குத்தி கொண்டார்.
பின்னர் மூக்குத்தியோடு பள்ளிக்கு சென்ற நிலையில் பள்ளி நிர்வாகத்தால் அதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறி மேக்கிக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதாவது மேக்கி எல்லா மாணவ, மாணவிகளுடன் அமர வைக்கப்படாமல் தனியாக அமரவைக்கப்பட்டார்.
அங்கு சாதாரணமாக செய்யும் விடயத்தை மேக்கி செய்ய தடை விதிக்கப்பட்டதோடு, கல்வி பயிலும் நேரமும் குறைக்கப்பட்டது. இதோடு இடைவெளியில் வெளியில் எழுந்து செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு மேக்கியின் தாயார் லுன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பள்ளியில் மூக்கு குத்துவதற்கு தடை இருப்பது எங்களுக்கு தெரியாது, அதை செய்ததற்கு என் மகளுக்கு நியாயமற்ற முறையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காதில் தோடு மாட்டி கொள்வதற்கு மட்டும் அங்கு அனுமதி உண்டாம், ஆனால் இரண்டுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. மூக்குத்தியை கழட்டினால் மட்டுமே தண்டனை திரும்ப பெறப்படும் என கூறிவிட்டனர், ஆனால் மூக்குத்தியை இப்போது அகற்ற முடியாது.
ஏனென்றால் அது குத்திய இடத்தின் புண் ஆறாமல் அகற்றினால் அது தொற்றாக மாறும். மேக்கி தனது பள்ளி சீருடை விடயத்தில் எப்போதும் சரியாகவே இருந்திருக்கிறாள் என கூறியுள்ளார்.
குறித்த பள்ளியின் பிரின்சிபால் ஜேன் பிரவுன் கூறுகையில், எங்கள் பள்ளிக்கு என கொள்கைகள் உள்ளது, அதை மாற்றும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.