பிரித்தானிய விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள்: பயணிகள் மத்தியில் குழப்பம்
பிரித்தானியாவின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் பயணிகளின் பையில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமான நிலையம் முழுவதும் பூட்டப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான பொருள்
பிரித்தானியாவின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் குழப்பத்திற்கு உள்ளாகினர்.
காலை 6 மணியளவில் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் பொலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
இந்த சம்பவம் முழுமையான தேடுதலுக்கு வழிவகுத்தது, இந்த சம்பவத்தில் விமான பயணிகளுக்கு போதுமான தகவல் வழங்கப்படாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Getty Images
சுமார் 6 மணியளவில் ஸ்காட்லாந்து பொலீசார் மத்திய தேடுதல் பகுதியில் பயணிகளின் பையில் இருந்த ஒரு பொருளைப் பற்றிய கவலையின் காரணமாக விமான நிலையத்திற்கு சென்றனர்.
பின்னர் பாதுகாப்பு காரணங்களால் கிளாஸ்கோ விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் கட்டிடம் மூடப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
எம்.பி குற்றச்சாட்டு
விமான நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, டெர்மினல் கட்டிடம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
thatgeorg1na/Twitter
SNP எம்.பி ரோனி கோவன், பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை, அத்துடன் அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கிளாஸ்கோ விமான நிலையம் இன்னும் மூடப்பட்டதாகத் தெரிகிறது.
வெளியே தீயணைப்பு படைகள். வெளியில் வரிசையில் நிற்கும் பயணிகளுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.