புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பிரித்தானிய அரசின் எச்சரிக்கை
புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதால் ஆகும் செலவைக் குறைப்பதற்காக, அவர்களை மிதவைப்படகுகளில் தங்கவைக்கும் திட்டத்தில் முதல் படி எடுத்துவைத்துவிட்டது பிரித்தானிய அரசு.
மிதவைப்படகுகள்
Barge எனப்படும் இந்த மிதவைப்படகுகள்தான் இனி புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்குமிடமாக ஆக்கப்பட உள்ளன. பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த மிதவைப்படகுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தும், Bibby Stockholm என்ற பெயர் கொண்ட மிதவைப்படகில் 15 புகலிடக்கோரிக்கையாளர்கள் ஏற்றப்பட்டாயிற்று.
news.sky
அந்த மிதவைப்படகு 222 பேர் மட்டுமே தங்கும் வசதிகொண்டது என்றும், அதில் மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கவைக்கப்பட இருப்பதாகவும், அத்துடன், படகில் லைஃப் ஜாக்கெட்கள் இல்லையென்றும், தண்ணீரில் நிற்கும்போது படகில் தீப்பற்றினால் தீயை அணைப்பதில் பிரச்சினைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசு விடுத்துள்ள எச்சரிக்கை
இந்நிலையில், அந்த மிதக்கும் சிறை என விமர்சிக்கப்படும் படகுகளில் ஏறாதவர்களுக்கு அரசு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
news.sky
படகில் ஏறாதவர்களுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத்தில், நீங்கள் உங்களுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் படகில் ஏறாவிட்டால், நீங்கள் உள்துறை அலுவலகத்திலிருந்து பெற்றுவரும் உதவிகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
news.sky
அப்படியானால், அந்த படகுகளில் ஏறாதவர்கள் வீடற்றவர்களாக விடப்படுவார்கள் என்பது அந்தக் கடிதத்தின் பொருளா என்பது தெரியவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |